சட்டவிரோதமாக குடியேறிய அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் – அமித்ஷா

பா.ஜனதா தலைவருமான அமித்ஷா நேற்று அரியானா மாநிலத்தில் கைத்தால் என்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

அதில் அவர் பேசியதாவது

சட்டவிரோதமாக குடியேறிய ஒவ்வொருவரையும் அவரவர் நாட்டுக்கே அனுப்ப வேண்டும் என்பதுதான் பா.ஜனதா அரசின் கொள்கை. ஏனென்றால் அவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். 2024-ம் ஆண்டு அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு உங்களிடம் ஓட்டு கேட்டு வரும்போது, சட்டவிரோதமாக குடியேறிய அனைவரும் வெளியேற்றப்பட்டு இருப்பார்கள்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்க முந்தைய அரசுகளுக்கு துணிச்சல் இல்லை. ஆனால், மோடி அரசு மீண்டும் பதவிக்கு வந்தவுடன் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இதை செய்து காட்டியுள்ளது.