சட்டப்பிரிவு 370 தீர்ப்பு | ஒருமைப்பாட்டை பலப்படுத்தும்: ஆர்எஸ்எஸ் கருத்து

ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பு பிரிவு தலைவர் சுனில் அம்பேத்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடக்கம் முதலே எதிர்த்து வந்துள்ளது. இந்த சிறப்பு சட்டப் பிரிவை ரத்து செய்ய வலியுறுத்தி நாங்கள் பல முறை தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம்.

இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது. இது வரவேற்கத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு தேசிய ஒருமைப்பாட்டை மேலும் பலப்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.