கோயில் சொத்து மீட்பு

திருவேங்கடத்தில் சொக்கலிங்க சுவாமி கோயிலுக்கு சொந்தமாக 275 சதுர அடி கட்டடத்தை பாக்கியலட்சுமி என்பவர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்துள்ளார். இது குறித்து அறநிலையத்துறைக்கு புகார் வந்தது. இதனை விசாரித்த அறநிலைத்துறை ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்தியது. கட்டடத்தை காலி செய்ய அவருக்கு அறநிலை௱த்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் பாக்கியலட்சுமி இடத்தை காலி செய்ய மறுத்துள்ளார். இந்நிலையில் சங்கரநாராயண சுவாமி கோயில் அறநிலையத் துறை அதிகாரிகள் குழு அங்கு சென்று கோயிலுக்கு சொந்தமான கட்டடத்தை பாக்கியலட்சுமியிடமிருந்து மீட்டு சீல் வைத்தது.