கோயிலுக்குகொரு பசு

பசுக்களை பாதுகாப்பது ஹிந்து சம்பிரதாயங்களில் முக்கியமான ஒன்று. இதற்காக  கர்நாடகா,  மல்லேஸ்வரத்தின்,  திருப்பதி திருமலை கோவில் நிர்வாகம் ‘கோயிலுக்கொரு பசு’ என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. பசுக்கள் தேவைப்படும் கோயில்களுக்கு திருமலை கோயில் நிர்வாகம், பசு, கன்றை வழங்கும். பெங்களூரின் இஸ்கான், யாத்கிரியின் எத்திராஜ் மடம் உட்பட பல கோயில், மடங்களுக்கு பசு,  கன்று  வழங்கப்பட்டுள்ளது.  மேலும் பல கோயில்களில் இருந்து பசுவுக்காக கோரிக்கை வந்துள்ளது. பசுவை பாதுகாக்க, அரசு தனியார் சார்பில் பல கோசாலைகள்  திறக்கப்பட்டுள்ளது என்றாலும், பசுக்களை முழுமையாக பாதுகாப்பது கஷ்டம். எனவே இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது என திருமலை திருப்பதி கோயில் ஆலோசனை கமிட்டி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான குபேந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.