கோயிலில் திருட்டு

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்லாநத்தம் கிராமத்தில் மாரியம்மன், விநாயகர் கோயில் உள்ளது. கடந்த 17ம் தேதியன்று நள்ளிரவில் இக்கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கோயிலின் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம், காணிக்கைப் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.