கூட்டு நடவடிக்கைக் குழு

பாரதம் அமெரிக்கா இடையிலான தொழில் பாதுகாப்பு ஒப்பந்த உச்சி மாநாடு, டெல்லியில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1, 2021 வரை நடைபெற்றது. இரு நாடுகளிலும் உள்ள ராணுவ பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களிடையே தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான நடைமுறைகளை உருவாக்கும் நோக்கில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டின்போது, பாரதம் அமெரிக்கா இடையே தொழில் பாதுகாப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைக்க கொள்கை அளவில் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.