குழந்தையை கடத்திய பாதிரி

திருச்சியை சேர்ந்த ஜெயராஜ் எனும் பாதிரியார், கிறிஸ்தவ போதனை எனும் பெயரில், மதமாற்றும் நடவடிக்கைக்காக ஜவ்வாது மலை, பெருங்காட்டூரில் முகாமிட்டிருந்தார். குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் எனும் பெயரில் குழந்தைகளிடம் அத்துமீறியுள்ளார். இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து காவல்துறை பாதிரியை போக்ஸோ சட்டத்தில் கைது  செய்யாமல் எச்சரித்து மட்டும் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 24ல் 13 வயது குழந்தை ஒன்றை அங்கிருந்து கடத்திக் கொண்டு பாதிரி தலைமறைவானார். அவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்தவர் என்பதும் அவரது நடத்தை காரணமாக மனைவிகள் அவரை பிரிந்து விட்டனர் என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.