குரு தேஜ்பகதூர் 400வது பிறந்தநாள்

ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் 400வது பிறந்த நாளையொட்டி இன்று இரவு 9.15 மணிக்கு டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அவர் இந்நிகழ்ச்சியில் உரையாற்றுவதுடன், நினைவு நாணயம் மற்றும் தபால் தலையையும் வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சியை மத்திய அரசு, டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இரண்டு நாள் (ஏப்ரல் 20 மற்றும் 21) நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாடகர்களும் குழந்தைகளும் ‘ஷாபாத் கீர்த்தனையில்’ பங்கேற்பார்கள். குரு தேஜ் பகதூரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பிரமாண்ட ஒளி ஒலி கண்காட்சி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. சீக்கியர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான ‘கட்கா’வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.