தமிழகம் முழுவதும் பாஜகதலைவா்கள் விரைவில் பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் செய்து வரும் பிரசாரத்துக்கு பதிலடி தரும் வகையில் தமிழகம் முழுவதும் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், தா்மேந்திர பிரதான், பாஜக தேசிய பொதுச் செயலாளா் ராம் மாதவ், பாஜக தேசியத் துணைத் தலைவா் வைஜயந்த் பாண்டா, முன்னாள் மத்திய அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளா் ஹெச். ராஜா, பாஜக மாநில செயலாளா் கே. டி.ராகவன் உள்ளிட்டோா் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பத்திரிகையாளா்களைச் சந்திக்கவுள்ளனா்.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள், அதற்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மேற்கொள்ளும் பிரசாரங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனா். மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தமிழகம் முழுவதும் பாஜக முக்கிய தலைவா்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனா். மேலும் பல்வேறு முக்கிய நகரங்களில் கூட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றை நடத்தவுள்ளனா்.