குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் சதி நடத்துள்ளது – யோகி

உ.பி., சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தை, நிறைவு செய்து பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, உத்தர பிரதேசத்தில் நடந்த போராட்டங்களில் உயிர் இழந்தவர்கள், போலீஸ் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகவில்லை. போராட்டக்காரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தான் சக போராட்டக்காரர்கள் உயிர் இழந்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் மிகப்பெரும் சதி நடந்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு பயங்கரவாத அமைப்புகள் நிதி உதவி அளித்துள்ளன. மக்களை கொல்லும் நோக்கத்தில், தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினால், ஒன்று அவர் இறக்க வேண்டும் அல்லது போலீஸ் இறக்க வேண்டும். இப்போரட்டத்தில் சாதுர்யமாக செயல்பட்ட காவல் துறையினருக்கு பாராட்டுக்கள்.