காவலதிகாரியின் அராஜகம்

ஒசூர் தேர்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக ஜெப வழிபாடு நடந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடிக்க விரைந்தனர். ஜெபக்குழுவினர் தப்ப முயற்சித்தனர்.

இவர்களை ஹிந்து முன்னணியினர் உதவியுடன் பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மதமாற்ற கும்பலை விசாரிக்காமல் புகார் கொடுத்தவர்களையே காவலதிகாரி செல்வராகவன் மிரட்டியுள்ளார்.

நியாயம் கேட்க சென்ற ஹிந்து முன்னணி நிர்வாகி உமேஷையும் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சக காவலர்களுடன் அவரை தாக்கியதாகவும் தெரிகிறது. இந்த விஷயம் ஓசூர் டி.எஸ்.பிக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.