காங்கிரசின் ஆள்மாறாட்டம்

பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமியின் குடும்ப விவரங்களை பகிர்ந்த குற்றத்தால் காங்கிரஸ் தலைவர் ராகுலின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அதனால், ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் பேர்வழி என பிரியங்கா ராபர்ட் வத்ரா, சகுந்தலா சாஹு, அல்கா லம்பா ஸ்ரீனிவாஸ் என பல காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் தங்களது புகைப்படத்திற்கு பதிலாக ராகுலின் படத்தையும், தங்களின் பெயரை ராகுல் காந்தி எனவும் மாற்றி வருகின்றனர். ஆனால், டுவிட்டர் விதிகளின்படி, புகைப்படம், பெயர் அல்லது பயோடேட்டாவை மாற்றுவது ஆள்மாறாட்ட குற்றம், வேண்டுமென்றே மக்களை தவறாக வழிநடத்துதல் என பொருள் கொள்ளப்படும். இதனால், அவர்களது கணக்குகள் இடைநீக்கம் செய்யப்படலாம். ‘இது குறித்து ஏதும் தெரியாமல் தங்களது தலைவரை போலவே சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றனர் இவர்கள்’ என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.