கமல் கழிசடைப் பேச்சு வள்ளியூர் ஹிந்துக்கள் வழக்குத் தொடுக்கிறார்கள்

அன்புடையீர் வணக்கம்.

சமீபத்தில் கோவையில் ஃபாரூக் என்பவர் திராவிட இயக்கத்தில் சேர்ந்து ‘அல்லா இல்லை’ என்று கூறியிருந்தார். அவ்வளவுதான் ஒரு பயங்கரவாத முஸ்லிம் கும்பல் அவரை வெட்டி கொன்றேவிட்டது. கொலையாளிகள் கைதாகியுள்ளனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் அல்லாவிற்கு எதிரானவர்களை தண்டிக்கும் எங்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.

இதுபோன்ற செய்திகளை படிக்கும்போது பலர் நம்ம மதத்தை மட்டும் கிண்டலும் கேலியும் செய்கிறார்களே… இதற்கு விடிவு காலம் கிடையாதா என்று நினைத்தது உண்டு.

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது ‘ஒரு பொம்பளையை வைத்து சூதாடியதை ஒரு புத்தகமாக இன்னும் படித்துக் கொண்டிருக்கிறார்களே’ என்று நையாண்டி செய்துள்ளார். செய்தி வெளியானவுடனே பல ஹிந்து இயக்கங்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். வள்ளியூர் அன்பர்கள் அவர் மீது ஹிந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தை இழிவு படுத்தியதாக வழக்கு தொடுத்துள்ளனர். மேலும் பல ஊர்களில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

வழக்குத் தொடுத்த வள்ளியூர் அன்பர்களை மனமாரப் பாராட்டுவோம். இதுபோன்ற வழக்குகளை தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்தால் இனி இது போன்று வசைபாடுகிறவர்களுக்கு புத்திவரும்.