கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த 23 பாகிஸ்தானியர்களை மீட்டது இந்திய கடற்படை

மோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தவித்த 23 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.
அரபிக்கடல் பகுதியில் ஈரான் நாட்டுக் கொடியுடன் சென்ற மீன்பிடி கப்பல் ஒன்றை கடற்கொள்ளையர்கள் கடத்தினர். அந்த கப்பலில் இருந்து இந்திய கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்திய கடற்படையினர் இரண்டு கப்பல்களில் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் களம் இறங்கினர்.
கடற்கொள்ளையருக்கு இந்திய கடற்படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு, கடற்கொள்ளையர்கள் சரண் அடைந்தனர். கப்பலில் இருந்த 23 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். சோமாலிய கடற்கொள்ளையர்களின் கப்பலுக்குள் நுழைந்த இந்தியக் கடற்படையினர் சோதனை செய்தனர்.
‘கடந்த மார்ச் 28ம் தேதி மாலை ஈரான் நாட்டை சேர்ந்த மீன்பிடிக் கப்பலான ‘அல்-கம்பார் 786’ஐ கடற்கொள்ளையர்கள் கடத்தினர். தகவல் கிடைத்தவுடன், அதிரடி நடவடிக்கை எடுத்து 23 பேரை பத்திரமாக மீட்டுள்ளோம்’ என இந்திய கடற்படை கூறியுள்ளது.