எல்.சி.யு கப்பல்

நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய 8வது எல்.யு.சி வகை கப்பல் கடற்படையில் அண்மையில் இணைந்தது. ஜி.எஸ்.ஆர்.இ நிறுவனம் தயாரித்துள்ள இந்த கப்பல், அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் பயன்படுத்தப்படும். கப்பலின் இறுதிப் பகுதிவரை நிலத்தில் செலுத்த முடியும் என்பதால் பீரங்கி போன்ற கனரக வாகனங்களை எளிதாக நிலத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். இதனால், நீரிலும் கரையை ஒட்டிய பகுதிகளிலும் தாக்குதல் நடத்த முடியும்.