ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்தது மத்திய அரசு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும். இதனையடுத்து அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரித்து உள்ளது. என தெரிவித்து உள்ளார். உஜ்வாலா திட்டம் மூலம் அளிக்கப்பட்டு வரும் கேஸ் மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதன்படி 10.27 கோடி பயனாளிகளின் வங்கிக ணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.