உதயநிதியின் செயல்பாடு

சட்டசபையில் சபாநாயகருக்கும் முதல்வருக்கும் வணக்கம் தெரிவிப்பது வழக்கம். ஆனால், நேற்று சட்டமன்றத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.கவின் அடுத்த வாரிசாக கருதப்படும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் உட்பட பல்வேறு மூத்த தி.மு.க தலைவர்கள் தங்கள் இருக்கையைவிட்டு எழுந்து வந்து பிரத்தியேக வணக்கம் தெரிவித்தனர். அவர்களுக்கு இருக்கையை விட்டு எழாமல் அமர்ந்தபடியே பதில் வணக்கம் தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின். தி.மு.க மூத்த தலைவர்களின் செயல்பாடுகளும் உதயநிதி ஸ்டாலினின் அவமதிக்கும் விதமான நடவடிக்கையும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.