உண்மை அஞ்சலி

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு அங்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது, ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய சாலைகள், பள்ளி, கல்லூரிகளுக்கு தேச விடுதலைக்கு பாடுபட்ட வீரர்கள், தேசம் காக்க உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் பெயர்கள் வைக்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு தியாகிகளின் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன. இதுவே தேசம் காக்க பாடுபட்ட தியாகிகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி ஆகும்.