இவர் திருவிளையாடல் தருமி

மும்பை காவல்துறையினரால் ரிபப்ளிக் தொலைகாட்சி தலைவர் அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ்அப் தகவல்கள் கசியவிடப்பட்டன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அர்னாப், பிரதமர் இந்த தகவலை எனக்குக் கொடுத்தார் என்று கூறுவது பொய். இதை திரித்துக் கூறும் காங்கிரஸ் மீது வழக்குத் தொடர்வேன் என கூறினார். மேலும் “இது குறித்து விவாதிக்க நான் தயார், உங்கள் ஆட்களை அனுப்ப வேண்டாம். உங்களால் முடிந்தால், விவாதத்தில் நேரடியாக என்னை எதிர்கொள்ளுங்கள்” என ராகுல் காந்திக்கு சவால் விடுத்துள்ளார். முன்னதாக இரு தினங்களுக்கு முன், பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டாவின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அவர் என்ன, பேராசிரியரா, அவருக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என பத்திரிகையாளர்களிடம் கூறி தப்பித்தவர் ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.