இவர்கள் விவசாயிகளா, பயங்கரவாதிகளா?

‘கிஸான் மகாசபா’ அமைப்பின் மாநில செயலாளர்  அருண் பங்கர் என்பவர் ‘விவசாய சட்டத்தை பிரதமர் மோடி திரும்ப பெறாவிட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ள வேண்டியிருக்கும். விவசாயிகளை மோடி சுட்டால் நான் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை குண்டு வைத்து தகர்ப்பேன், அதன் தலைவர் மோகன் பாகவத்தை கொல்வேன்’ என பேசியுள்ளார். இதனால் அவர் மீது கோத்வாலி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் வைக்கப்படும் தேசவிரோத கோஷங்கள், காலிஸ்தான் பயங்கரவாதிகளின் படங்கள், கம்யூனிச சின்னங்கள், இந்திராகாந்தியை கொன்ற நாங்கள் மோடியையும் கொல்வோம் என பேசுவது போன்றவை இது விவசாயிகள் நடத்தும் போராட்டமல்ல, பயங்கரவாதிகள் பின்னின்று இயக்கும் ஒரு தேசத்திற்கெதிரான வன்முறை முன்னேற்பாடாகவே தெரிகிறது.