இந்துமுன்னணி பொறுப்பாளர் மீது தாக்குதல்

கள்ளக்குறிச்சி நகரத்தில் உள்ள ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் ராஜகோபுரம் அருகில் பெரிய இரும்பு தூணை வைக்கும் இடத்தில், இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் அது சம்பந்தமாக அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் காவல்துறையுடனும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, அங்கு வந்த மின்சாரத்துறை சார்ந்த காமராஜ் என்பவர், அங்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்த, நகரச்செயலாளர் வெங்கடேசனை தகாத வார்த்தைகள் பேசி கடுமையாகத் தாக்கினார். இதனால் காயமடைந்த வெங்கடேசன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இது சம்பந்தமாக காமராஜ் மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என்றும் மற்றும் மின் இணைப்பு துறை அதிகாரிகளிடம், இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக பணிநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.