இதுதான் தி.மு.கவின் மதசார்பின்மை

குலசேகரன் பட்டிணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் இவ்விழா பிரம்மாண்டமாக நடக்கும். இவ்விழா இந்த வருடம் கொரோனாவை காரணம் காட்டி பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல புரட்டாசி சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோயில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. சதுரகிரியிலும் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், சாத்தான் குளம், சொக்கன்குடி மணல் மாதா தேவாலயத்தில் செப்டம்பர் 17ல் கொடியேற்றத்துடன் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்க திருவிழா துவங்கி நடைபெறுகிறது. தைலாபுரம் உபகார அன்னை தேவாலய திருவிழா நேற்று துவங்கி 10 நாட்கள் கிறிஸ்தவர்கள் பங்கேற்புடன் நடக்கிறது.