ஆர்.எஸ்.எஸ் அலுவலக வாசல் ஆர்ப்பாட்டக்காரர்கள்

அவலை நினைத்து

உரலை இடித்தார்கள்!

காவிரி பங்கீடு பிரச்சினைக்காக சென்னையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்த்து அதன் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தைச் சுற்றி தமிழர்கள் முற்றுகைப் போர்” என்று கொட்டை எழுத்துக்களில் சுவரொட்டி ஒட்டியிருந்தனர். தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மே 17 இயக்கம், தமிழர் கழகம் என 17 அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்றன.

காவிரி பிரச்சினைக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் என்னய்யா சம்பந்தம்? தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று சொல்வது அங்குள்ள சீதாராமையாவின் காங்கிரஸ் அரசு. அதற்காக ஆர்ப்பாட்டம் செய்யவேண்டிய இடம் சென்னை சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ் அலுவலகம் முன்பு. அதை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தின் முன்பு இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது பைத்தியக்காரத்தனம்.kaviri

ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் கையில் வைத்திருந்த பேனரில் தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லை… நாங்கள் தமிழர்கள்” என்று வாசகம் எழுதப்பட்டிருந்தது. இந்த வாசகத்தின் மூலம் ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்ட அமைப்பினர்கள் அனைவரும் ஹிந்து விரோத, தேச விரோத, பிரிவினைவாதிகள் என்பது தெளிவாகப் புரிகிறது.

தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை கொண்டாடுகிற ஹிந்துக்கள் தானே தமிழர்கள்?

தேவாரம், திருவாசகம், திருக்குறள், கம்ப ராமாயணம் படிக்கும் ஹிந்துக்கள் தானே தமிழர்கள்?

அப்பா, அம்மா என்று அழைக்கும் ஹிந்துக்கள் தானே தமிழர்கள்?

வணக்கம் என கை கூப்பி அன்பு பாராட்டும் ஹிந்துக்கள் தானே தமிழர்கள்?

திருமணத்தில் தாலி ஏற்கிற ஹிந்து பெண்கள் தானே தமிழச்சிகள்? எனவே ஹிந்துக்கள் தானே தமிழர்கள்தமிழர்கள் தான் ஹிந்துக்கள்.

காவிரி பிரச்சினை என்ற பெயரில் ஹிந்து விரோத கும்பல்களின் கயவாளித்தனம் தமிழகத்தில் வெற்றி பெறாது.