அவலை நினைத்து உரலை இடிக்கலாமா? தேவை, பாரதப் பண்பாடு பற்றி ராகுலுக்கு டியூஷன்

வயநாடு எம்.பி ராகுல் காந்தி, உலக அளவில் இந்தியா கற்பழிப்புகளின் தலை நகரமாக இருக்கிறது. அந்நிய நாட்டினர், இந்தியா தனது புதல்விகள், சகோதரிகளுக்குப் பிறகு, மற்ற பெண்களை ஏன் அது போல் பார்க்க முடியவில்லை என்ற கேள்வியை கேட்கிறார்கள் என கூறியுள்ளார். உலகத்தில் பாரத தேசத்தில் மட்டுமே கற்பழிப்பு நடப்பதாகவும், அதுவும் கடந்த ஐந்தாண்டுகளாக மட்டும் நடப்பதாக உலக அரங்கில் ஒரு பிம்பத்தை உருவாகியவர்கள் ராய்ட்டர், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் போன்ற அந்நிய ஊடகங்கள். அந்நிய ஊடகங்களுக்கு துணை போகும் விதத்தில் ராகுல் காந்தி பேசுகிறார்.

2004 முதல் 2014 மே மாதம் வரை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி ஆட்சியில், காவல்துறையின் மூலமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றிய விவரங்களை பார்த்தால், யாருடைய ஆட்சியில் அதிக அளவில் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றன என்பது தெரியும்.  2009 முதல் 2011 வரை பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 68,000.

உலகில் அதிக அளவில் கற்பழிப்பு சம்பவங்கள் நிறைந்த நாடுகள் தென் ஆப்ரிக்கா, சிரியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா, பாகிஸ்தான், காங்கோ, யேமன்,  நைஜீரியா, எகிப்து, அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவை. இங்கிலாந்து நாட்டில், ஒவ்வொரு வருடமும் 85,000 பெண்கள் பாலியல் தொல்லைக்கு உட்படுகிறார்கள்.   இந்த புள்ளி விவரங்கள் ராகுல் காந்திக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.  ஏன் என்றால் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் தன் நாட்டிற்கு விரோதமாக எப்படி  கருத்து வெளியிடுவார்!

2013-லிருந்து இன்று வரையிலான முஸ்லிம் கருத்துக் கணிப்பில், பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு அதிகமாக உட்படுத்தும் முஸ்லிம்  நாடுகளில் எகிப்துக்கு முதலிடம்.  உலகில் பெண்கள் கொடுமைக்குள்ளாகும் நாடுகளின் வரிசையில் முஸ்லிம் நாடுகள் முன்னிலை வகிப்பதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கற்பழிப்பின் உலகத் தலைநகர் தென்னாப்பிரிக்கா என்பதை மறந்து மோடியை தாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, பாரத தேசத்தின் பெருமையை சிறுமைப்படுத்தி ராகுல் பேசியது அக்கிரமம்.

     உலகில் பெண்ணை தெய்வமாக மதிக்கும் நாடு பாரத தேசம். அனைத்து பெண்களையும் தாயாக பார்ப்பதால்,  பிறந்த நாட்டை தாய் நாடு என கூறுகிறேம்.  உலகில் எந்த நாடும்,  தனது நாட்டை தாய்நாடு என கூறுவதில்லை என்பதை ராகுல் தெரிந்து கொள்ள வேண்டும்.  நதிகளுக்கு பெண்கள் பெயர்கள் வைப்பதற்கு முக்கியமான காரணம், அவை பூஜிகப்பட வேண்டும் என்பதற்காகவே.   தன் மனைவியை தவிர மற்ற பெண்களை சகோதரி களாகவும் தாயாகவும் பார்க்கும் பூமி பாரத பூமி என்பதும் ராகுல் பாபாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.