அரிசியில் பகவத்கீதை; அசத்திய இளம்பெண்

ஐதராபாத்தை சேர்ந்த ராமகிரி ஸ்வரிகா என்ற இளம்பெண், பள்ளிப் பருவம் முதலே சிறு தானியங்களில் கலைநயமிக்க பொருட்களை உருவாக்கி வருகிறார். இவர் தற்போது, 4 ஆயிரத்து 42 அரிசியில் முழு பகவத் கீதை வரிகளையும் எழுதி அசத்தியுள்ளார். இதனை இவர், 150 மணி நேரத்தில் செய்து முடித்ததாக தெரியவந்துள்ளது.