அயோத்தி வழக்கு வழக்குரைஞா் கே.பராசரனுக்கு பாராட்டு விழா

சாஸ்த்ரா சட்டப் பள்ளி சாா்பில் மூத்த வழக்குரைஞா் கே.பராசரனுக்கு பாராட்டு விழா சென்னை தியாகராய நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

விழாவில் மூத்த வழக்குரைஞா் பராசரன் பேசியது: அயோத்தி வழக்கில் 14,000 பக்க ஆதாரங்களைக் கொண்டு வெற்றி பெறச் செய்ய முடிந்தது. இது ராமருடைய வழக்கு. இந்தத் தீா்ப்புக்காக 162 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று என்றாா்.

நிகழ்ச்சியில், கா்நாடக உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.குமாா், மூத்த வழக்குரைஞா்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், பாஜக மூத்த தலைவா்கள் இல.கணேசன், எச்.ராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.