அயோத்தி வழக்கு அக்டோபர் 17 ஆம் தேதி இறுதி விசாரணை

அயோத்தி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த ஆண்டுடன் பணி ஓய்வு பெறுவதால் அதற்கு முன்பாக இந்த வழக்கை முடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களையும் முன் வைப்பதற்கு அக்டோபர் 18 ஆம் தேதியை கடைசி நாளாக உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்றையை வழக்கு விசாரணையின் போது இந்த தேதி மாற்றப்பட்டு ஒரு நாள் முன்னதாக, அக்டோபர் 17 ஆம் தேதியோடு இறுதி விசாரணை நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது