அமர்நாத் யாத்திரை

இரண்டு ஆண்டுகள் கழித்து அமர்நாத் யாத்திரை தொடங்கியுள்ளதையடுத்து பக்தர்கள் ஆர்வத்துடன் அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லத் துவங்கியுள்ளனர். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை முறியடிக்க பலத்த பாதுகாப்பு, வாகன தணிக்கைகள், உடமைகள் சோதனை உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பவனில் நேற்று அதிகாலை அமர்நாத் சிவபெருமானுக்கு பிரார்த்தனை செய்தார். ‘நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் யாத்திரைக்கு வருகின்றனர். அவர்களின் யாத்திரை வெற்றிகரமாக நடக்கும் என்று நம்புகிறேன்’ என தெரிவித்தார்.