அபாயத்தை உணராத கனடா

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீன ராணுவத்திடம் தனது நாட்டு ராணுவத்துக்கு குளிர்காலப் போர் பயிற்சியளிக்க ரகசிய ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளார். கனடா நாட்டினர் இருவரை சீனா கடத்தியதால் இந்த பயிற்சியை கனடா ராணுவம் நிறுத்திவிட்டது. இதனால் தன் நாட்டு ராணுவத்தினர் மீது கோபப்பட்டுள்ளார் ட்ரூடோ. ‘ரிபெல் நியூஸ் நெட்வொர்க்’ என்ற தொலைக்காட்சி இது குறித்த ரகசிய ஆவணத்தை வெளியிட்டுள்ளது. ட்ரூடோவின் இந்த செயலால் கனடா நாட்டு மக்களும் அண்டை நாடான அமெரிக்காவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு, விவசாய போராட்டங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது என ட்ரூடோ பதவியேற்றது முதல் பாரதத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.