அநியாய மின் கட்டண உயர்வு அமல்

பொது மக்கள், கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி தமிழக அரசு அநியாயமாக உயர்த்தியுள்ள மின் கட்டணம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதைத்தவிர மின் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்திக்கொள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அறிவிப்புகள் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.