அஞ்சலி

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த ஸ்வயம்சேவகரும் விஜயபாரதத்தின் அச்சகப் பிரிவான மாதவ முத்ராவின் அறங்காவலராக 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி, விஜயபாரதம் மாதவ முத்ரா வளர்ச்சிக்கு உதவியவருமான D.V. ராஜகோபால், வயது மூப்பின் காரணமாக கடந்த திங்கட்கிழமை காலமானார். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளில் தேசப்பணிகளை செய்துவந்த இவர், சமீபத்தில் தனது மீதமுள்ள சேமிப்புகளை சங்கத்தின் அறக்கட்டளை ஒன்றிற்கு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.