விமானப்படை நன்றி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி கிராமத்தில் கடந்த 8ம் தேதி ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த ராணுவ அதிகாரிகள், காவல்துறையினர், தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பணிகளுக்கு அந்த கிராம மக்களும் உதவி செய்தனர். இந்நிலையில், விமானப்படை, ‘துரதிர்ஷ்டவசமாக நடந்த ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து, மீட்புப்பணிக்கு உடனடியாகவும், தொடர்ந்தும் உதவி செய்த தமிழக அரசு, நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காட்டேரி கிராம மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்’ என அறிக்கை வெளியிட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கியது.