விண்வெளியில் இருந்து வந்த வாழ்த்து

நமது தேசம் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில்  இத்தாலிய விண்வெளி வீராங்கணை சமந்தா கிறிஸ்டஃப்ரோட்டி, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ஒரு வாழ்த்து வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “பாரதம் தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் இத்தாலிய விண்வெளி முகமை (ஐ.எஸ்.ஏ), அமெரிக்க விண்வெளி மையம் நாசா இன்னும் பல சர்வதேச கூட்டாளிகள் சார்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவுக்கு வாழ்த்து கூறுகிறேன். சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வாழ்த்துகளைப் பகிர்கிறேன். பல ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் பலவும் இஸ்ரோவுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு இஸ்ரோ ஆயத்தமாகும் சூழலில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்திய வீடியோவை அமெரிக்காவுக்கான பாரதத் தூதர் தரஞ்ஜித் சிங் சந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.