ராகுல் மீது அடுத்தடுத்த புகார்கள்

ராகுல் காந்தி தனது ‘பாரத் ஜோடோ’ யாத்திரையின் போது சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கருக்கு எதிராக கூறிய கருத்து அவரை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. வீர சாவர்க்கருக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துக்களை தெரிவித்த ராகுல் காந்திக்கு எதிராக, வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் சமீபத்தில் சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த சூழலில், பாலாசாஹேபஞ்சி சிவசேனா கட்சித் தலைவர் வந்தனா டோங்ரே, தானே காவல் நிலையத்தில் இதே சம்பவம் குறித்து மற்றொரு புகார் அளித்துள்ளார். இதேபோல நிருபேந்திர பாண்டே என்பவர், வீர சாவர்க்கரை அவமதித்ததற்காக ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை நீதிபதி, இந்த வழக்கை புகாராக பதிவு செய்ய உத்தரவிட்டார்.