மின் வாரியத்திற்கு கண்டனம்

ஹிந்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கும் கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் வியாபார நிறுவனங்களை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பது பல ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ள வழக்கம். ஏற்கனவே  கொரானா ஊரடங்கு காரணமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் வியாபாரிகள், தீபாவளி பண்டிகையின்போதாவது ஏதாவது வியாபாரம் நடக்கும் என்று வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கடைகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். மின்வாரியத்தின் இந்த அறிவிப்பு வியாபாரிகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வேற்று மத பண்டிகைகளின் போது மட்டும் அமைதியாக இருக்கும் மின் வாரியம், தீபாவளி பண்டிகைக்கு மட்டும் இது போன்ற அறிவிப்பை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. எனவே மின் வாரியம் உடனடியாக இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்’ என்று கோரியுள்ளார்.