புண்ணிய தீர்த்தங்கள் அனுமதி

ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களை திறக்கக்கோரி இந்துமுன்னணி அமைப்பு பல கட்ட போராட்டங்கள் நடத்தியது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், இதனை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் குறித்து எடுத்துரைத்ததுடன் உடனடியாக இந்த புண்ணிய தீர்த்தங்களை திறக்க தமிழக அரசை வலியுறுத்தினார். இதனையடுத்து ஸ்ரீ ராமநாத சுவாமி திருக்கோவிலின் 22 புண்ணிய தீர்த்தங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.