பிரதமர் வேண்டுகோள்

குஜராத் அம்பாஜி தீர்த்தத்தில் ஒலி, ஒளிக் காட்சியில் பங்கேற்குமாறு பக்தர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “குஜராத் மாநிலம் அம்பாஜி தீர்த்தத்தில் பக்தர்களுக்கு மிகவும் மங்களகரமான தருணம் வந்துள்ளது. இன்று (நேற்று) மாலை 7 மணி முதல், 51 சக்திபீடங்களின் பரிக்கிரமா திருவிழா இங்கு தொடங்குகிறது. இதில் நமது புராணங்களின் கண்கவர் விளக்கத்துடன் கூடிய ஒளி, ஒலி காட்சியும் அடங்கும். இந்த மாபெரும் நிகழ்ச்சியில் நீங்கள் அனைவரும் பங்கு பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.