பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை 1664 கோடி கிடைத்துள்ளது

பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தில், தமிழகத்திற்கு இதுவரை, 1,664 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும், 6,000 ரூபாய் வழங்கும், பிரதமரின் உதவித்தொகை திட்டம், பிப்., மாதம், மத்திய அரசால் துவங்கப்பட்டது.

இதில் சேர்க்கப்படும் விவசாயிகளுக்கு, மூன்று தவணையாக, தலா, 2,000 ரூபாய் வழங்கப்படும். தமிழகத்தில், இத்திட்டத்தில், 34 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, புதிதாக விவசாயிகளை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது.இந்நிலையில், இத்திட்டம் வாயிலாக, தமிழக விவசாயிகளுக்கு, 1,664 கோடி ரூபாயை, மத்திய அரசு இதுவரை வழங்கியுள்ளது. முதல் தவணையாக, 31.23 லட்சம் விவசாயிகளும், இரண்டாம் தவணையாக, 28.74 லட்சம் விவசாயிகளும், மூன்றாம் தவணையாக, 23.22 லட்சம் விவசாயிகளும் பயன் அடைந்துள்ளனர். முதல் தவணை பெற்ற விவசாயிகளில் பலர், உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால், அவர்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணை நிதி கிடைக்கவில்லை என, தெரிய வந்துள்ளது. அதை தருவதற்கான முயற்சிகளை, வேளாண் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.