பழிதீர்க்கப்பட்ட பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்டம் சாதூரா நகரில் உள்ள தாலுகா அலுவலகத்துக்குள் கடந்த வியாழக்கிழமை புகுந்த பயங்கரவாதிகள் 3 பேர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில், புலம் பெயர்ந்தோர் நலனுக்கான சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய ராகுல் பட் என்ற காஷ்மீரி பண்டிட் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து ராகுல் பட் உறவினர்களும், காஷ்மீரி பண்டிட்களும் போராட்டம் நடத்தினர். இதில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும், ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரும் இணைந்து, பந்திபோராவின் பிரார் (அராகம்) பகுதியில்  பதுங்கி இருந்து மூன்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை என்கவுன்ட்டரில் சுட்டுத் தள்ளினர். இந்த 2 பயங்கரவாதிகளும் சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர்கள் என்பதும் மே 11ல் நடந்த என்கவுன்ட்டரின்போது தப்பியோடியவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.