துணைபோகும் வைகோ

#திம்மராஜபுரம் கோயிலின் 120 ஏக்கர் நிலம் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளது. இவற்றை அகற்றகோரி வி.எச்.பி அமைப்பு சமீபத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தது. இந்த நிலையில் மதிமுக தலைவர் வைகோ, அந்த கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கே பட்டா போட்டு தரவேண்டும் என முதல்வருக்கு, தன் எம்.பி கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார். கோயில் நிலம் கோயிலுக்கே, அதன் வருமானமும் கோயிலுக்கே என்பது நியதி. இது தெரிந்திருந்தும் தொடர்ந்து ஹிந்துக்களின் மனதை புண்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளார் வைகோ.
வக்பு வாரியம், மிஷனரிகளுக்கும்கூட பல ஏக்கர் நிலங்கள் சொந்தமாக உள்ளன. இவற்றையும், இப்படி ஏழை எளிய மக்களுக்கு பட்டா போட்டுதர வைகோ முயற்சிப்பாரா?