சுற்றுசூழல் பாதுகாப்பு முக்கியம்

குஜராத் தொழில்முதலீட்டாளர் மாநாட்டில் இணையம்  வழியாக பேசிய பிரதமர் மோடி, ‘நாம் பாரதத்தின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிகவும் முக்கியம். இந்த 25 ஆண்டுகளில் நமது பணி சூழல், வாழ்க்கைமுறை, தொழில், வணிகத்தில் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. தொழில்நுட்பம் வேகமாக மாறி வருகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சி அவசியம். பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொண்டு வருகிறோம். இந்த சவால்களுக்கு இடையே நமது சுற்றுச்சூழல், இயற்கை வளங்களை பாதுகாப்பது அவசியம். மக்களின் நலன்கருதி பாரதம் இதில் முக்கிய நடவடிக்கை எடுக்கும்’ என தெரிவித்தார்.