சிறுமிகள் பலாத்காரம்

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள புன்ஹானா மதரஸாவில் மதக்கல்வி மற்றும் உருது படிப்புக்காக இரண்டு வெவ்வேறு முஸ்லிம் குடும்பங்களை சேர்ந்த இரண்டு சிறுமிகள் சென்று வந்தனர். அவர்களை அங்குள்ள மௌல்வியும் அவருடைய நண்பர்கள் 7 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனை வீடியோ எடுத்து பலமுறை அந்த சிறுமிகளை சீரழித்தனர். பின்னர், சிறுமிகளின் பெற்றோரிடம் பத்து லட்ச ரூபாய் கேட்டு மிரட்டினர். அவர்களால் 6 லட்சம் மட்டுமே கொடுக்க முடிந்தது. இதனால், அந்த வீடியோக்களை மௌல்வி இணையதளத்தில் வெளியிட்டார். இதனை அறிந்த அந்த சிறுமிகளின் குடும்பத்தினர் குருகிராம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனையடுத்து, மௌலவி முகமது ஹசன், ஜஹுல்ஹக், ஃபக்ருதீன், முஸ்தக், யூனுஸ், முஸ்தபா, தையாப் மற்றும் வாரிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.