சிதம்பரம் நடராஜர் கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்து ஏற்பாடு

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற ஜன.10ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுவதால், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஜன.9-ம் தேதி முதல் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், கும்பகோணம், திருச்சி ஆகிய ஊர்களிலிருந்து சிதம்பரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.