கோயில் நிலங்கள் மீட்பு

தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களில், தற்போது சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 991 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு செய்வர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோயிலுக்கு சொந்தமான இடங்களை அளக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.