கஞ்சா விற்ற தி.மு.கவினர்

சென்னை, பல்வாரத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்தத் தகவலையடுத்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், பல்லாவரம், துரைப்பாக்கம் சாலையில் உள்ள முட்புதரில் மறைந்திருந்த அர்ஜூனன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கஞ்சா விற்பனை செய்வதாக தெரியவந்தது. அவர் மூலம் பல்லாவரத்தை சேர்ந்த தினேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள கஞ்சா வியாபாரியான வாண்டு (எ) அருணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விசாரணையில் தினேஷ் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும் எம்.எல்.ஏவும் நடிகருமான உதயநிதி நற்பணி மன்றத்தின் பல்லாவரம் நகர செயலாளராக இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் ஏற்கனவே போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தி.மு.க தலைவர்களில் ஒருவரான உதயநிதியின் ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.