ஒய்.எம்.சி.ஏ கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார்

சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வி கல்லூரி முதல்வர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது, முதுகலை படிக்கும் மாணவியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இதை உறுதி செய்த மூத்த காவல் அதிகாரி ஒருவர், சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் இந்த வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.அந்த மாணவி அளித்த புகாரில்,’ஒய்.எம்.சி.ஏ கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம், கடந்த மூன்று மாதங்களாக தன்னை ஆபாசமான செய்திகளை அனுப்பி பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அவர் அருவருப்பான அழைப்புகளையும் செய்தார்.பலமுறை எச்சரித்தும் அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, வழக்கை பதிவு செய்வதற்கு முன், அந்த மாணவியின் அலைபேசியில் வந்த செய்திகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.