எந்தவொரு இந்துவும் தீவிரவாதி அல்ல-கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசும் போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் எனக்கூறினார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அரவக்குறிச்சியில் கமலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கமலின் கருத்து தொடர்பாக பிரதமர் மோடியின் பதில் : எந்த ஒரு ஹிந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. அப்படி இருந்தால், அந்த நபர் ஹிந்துவாக இருக்க முடியாது. ஹிந்து எனக்கூறும் நபர் தீவிரவாதி கிடையாது. எந்த ஒரு தீவிரவாதியும் ஹிந்து என உரிமை கோர முடியாது. உலகமே ஒரு குடும்பம் என்பது ஹிந்து மதத்தின் ஆழமான நம்பிக்கை. அதில், மக்களை கொல்லவோ, துன்புறுத்தவோ ஹிந்துக்களுக்கு அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.