எது திராவிட அரசியல் ? – எச்.ராஜா

‘லட்சக்கணக்கான கோடிகளை சேர்த்து வைத்து, ஊழலை நடமாட விடமாட்டோம் என்பது தான், திராவிட அரசியல்’ என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஹிந்து மத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசியபடி, கிறிஸ்துவ, இஸ்லாமிய மத கூட்டங்களில் பங்கேற்பது; சாராய ஆலை நடத்திக் கொண்டே, டாஸ்மாக்கை மூட சொல்வது, ஹிந்தி கற்றுத் தரும் பள்ளிகள் நடத்தியபடி, ஹிந்தியை எதிர்ப்பது தான் திராவிட அரசியல்.தன்னுடைய குழந்தைகளை, பல லட்சங்களை கட்டி, பள்ளிகளில் படிக்க வைத்து விட்டு, அதே கல்வியை, கிராமத்து ஏழைகளுக்கு, இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும், லட்சக்கணக்கான கோடிகளை சேர்த்து வைத்துக் கொண்டு, ஊழலை நடமாட விட மாட்டோம் என்பது தான், திராவிட அரசியல். இவ்வாறு, எச்.ராஜா கூறியுள்ளார்.

One thought on “எது திராவிட அரசியல் ? – எச்.ராஜா

Comments are closed.