இந்திய மருத்துவ மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

புதுடில்லியைச் சேர்ந்த மாணவர் ஆதித்யா அட்லகா, 26. இவர் அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாடி பல்கலையில் மூலக்கூறு உயிரியல் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சி படிப்பில் இணைந்து பயின்று வந்தார்.இந்நிலையில் சமீபத்தில் இவர் சின்சினாடியில் காரில் சென்ற போது, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினார். துப்பாக்கிசூடு சத்தம் கேட்ட வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து ஆதித்யாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மையத்தில் சேர்த்தனர். இரண்டு நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி ஆதித்யா உயிரிழந்தார்.

அவரது காரின் கண்ணாடி ஜன்னல்களில் மூன்று தோட்டாக்கள் பாய்ந்ததன் அடையாளம் இருந்ததாக தெரிவித்த போலீசார் கொலையாளியை தேடி வருகின்றனர்.