மணல் பரப்பில் மாணவர் கடல்

தேசத்துரோக புல்லுருவிகளின் நீசத்தனங்கள் அம்பலம்!

திராவிட சிந்தனை, தேசவிரோத சிந்தனை, கம்யூனிஸ சிந்தனை கொண்ட இயக்கங்கள், தேசிய நீரோட்டத்தை எதிர்க்கும் அமைப்புகள், தமிழ் தேசியம் பேசித் தனித் தமிழ்நாடு கோரும் அமைப்புகள், தேசப்பிரிவினையை ஆதரிக்கும் அமைப்புகள், பகுத்தறிவு-முற்போக்குச் சிந்தனை என்று கூறிக்கொள்ளும் அமைப்புகள் ஆகியோரின் சித்தாந்தப் பிரச்சாரக் கூடமாக, செலவில்லா மாநாட்டுத் திடலாக, சொர்க்கபுரியாக, ஆட்டம், பாட்டம், கேளிக்கைகள், மீடியாக்களின் ஆதரவு என நேர்த்தியாக, கவனமாக வடிவமைக்கப் பட்டிருந்தது, மெரினாக்  கடற்கரைப் போராட்டம். தொடங்கப்பட்டது என்னவோ ஜல்லிக்கட்டிற்காக, ஆனால் அதன் வளர்ப்பு, செழிப்பு எல்லாம் இந்திய எதிர்ப்பு! தனித் தமிழ்நாடு! மோடி – பன்னீர்செல்வம் ஒழிக !

ஆறு நாட்களில் ஜனவரி (17 முதல் 22 வரை) முதல் இரண்டு நாட்களைத் தவிர மீதம் இருந்த அனைத்து நாட்களும் தீவிரமான மோடி – பன்னீர்செல்வம் எதிர்ப்புதான். பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா ஆகிய மூவரையும் மிகவும் அநாகரிகமான முறையில், ஆபாசமாக, சித்தரித்து விமர்சனம் செய்வதுதான் பிரதானமாக இருந்தது. இந்தியா  வேண்டாம்! தனித் தமிழ்நாடு வேண்டும்! இந்திய தேசிய கொடி அவமதிப்பு என நீண்டது போராட்டத்தின் விஷக்கரங்கள். உண்மையாகவே ஜல்லிக்கட்டிற்காக போராட வந்த மாணவர் கூட்டம் செய்வதறியாது திணறியது. அப்பாவியாக தமிழன் என்ற ஒரு அடையாளத்தை மட்டும் சுமந்துகொண்டு  ஜல்லிக்கட்டு வேண்டும் என்று கூடிய மாணவ-மாணவியர்களை, நாட்டிற்கு எதிராக, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக திருப்பியதுதான் முற்போக்கு இயக்கங்கள் என்று சொல்பவர்கள் செய்த வேலை. உணர்ச்சியின் விளிம்பில் இருக்கும் மாணவனை-மாணவியை மேலும் தூண்டிவிட்டு கைகளில் இந்திய எதிர்ப்பு வாசகங்களைக் கொடுத்து மோடியையும் பன்னீர்செல்வத்தையும் திட்ட வைத்தது, அப்பாவி இளைஞனுக்கு உணவுவழங்கி, மேடை போட்டுக் கொடுத்து, அவனின் உணர்ச்சியை தூண்டிவிட்டு, மூளைச்சலவை செய்து, தாய்நாட்டிற்கு எதிராக திருப்பி விட்டதுதான்,  பகுத்தறிவு – கம்யூனிஸ கூட்டத்தின் லீலை. சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற உண்மை நோக்கத்திற்காக கூடிய கூட்டத்திற்கு நாம் என்றும் தலை வணங்குகிறோம், நன்றியுணர்வோடு மதிக்கிறோம், அவர்களின் பலன் கருதாத அர்ப்பணிப்பு, போராட்ட உணர்வு, நிலையான புரட்சி ஆகியவைதான் ஜல்லிக்கட்டிற்கான தடையை நிரந்தரமாக நீக்கியது. மாணவர்களின், இளைஞர்களின் உண்மையான போராட்ட உணர்வை தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளத் துடித்த இயக்கங்களின் மாயவலைகள் ஏராளம். மோடி எதிர்ப்பு என்ற பெயரில் நாட்டை இகழ்வதும், நாட்டைத் துண்டாட நினைப்பதும் முட்டாள்தனம்.
கட்டுரையாளர் ‘மண்வாசனை’ உறுப்பினர், ஆராய்ச்சி மாணவர்

பெண்மானப் பெண்சிங்கம்!

அனுராதா கொய்ராலா – பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த 12,000 பேரை காப்பாற்றியவர். மேலும் 45,000 பேர் இதில் சிக்காமல் தடுத்தவர். இவருக்கு பாரத அரசு இந்த குடியரசு தினத்தன்று பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.
வாளும் கேடயமும் வயதுக்கில்லை!
களரிப்பயட்டு சொல்லித்தரும் 76 வயது பாட்டி. சாகும்வரை கற்றுத்தருவேன் என்கிறார். இவருக்கும் பத்ம ஸ்ரீ.